அது தான் உண்மை காதல்
ஒரு பெண்ணை
உண்மையாக நேசிக்கும்
எந்த ஒரு ஆணும்,
தன் மனசை
வேறொரு பெண்ணிடம்
பங்குபோடுவதில்லை...;
தெய்வீக காதலாய் இருப்பின்
கண்களை மொய்க்கும்,
கரங்கள் சுருங்கும்
தொடாது தொடரும்;
காத்திருக்கும் மனதுக்குள்
காதல் மேகங்கள்
கருத்திருக்கும்,
கன மழை பெய்யுங்கால்
கல்யாணம் முடிந்திருக்கும்;
மாறாக மேகங்கள் கலைந்தாலோ
கன்னி சாமி காளை சாமி
கண் மூடி தவமிருக்கும்;
மொட்டு விட்ட காதல்
பட்டு போயிருக்கும்,
தட்டு தடுமாறி எழுந்து நிற்கையில்
தாடி வளர்ந்திருக்கும்...!
அது தான் உண்மை காதல்..!