புதுமுக நடிகையின் வனப்பில்லா அழகு

அவளுக்கென்ன
அழகு முகமென
திரைக்கு
தயாராகிறாள்.

அச்சம் உண்டு,
மடம் இல்லை?
நாணம் இல்லை,
பயிர்ப்பு உண்டு?

ஏனெனில்

வறுமையின்
கோர நகங்கள்
கீறின முகம்.......

அவளை
அழகியென்றே
அழைத்தன
காகிதப் பொய்கள்.....

ஒரே பொய்யை
திரும்ப திரும்ப சொல்லியே
உலக அழகியானாள்,

ஆனாலும்,
கண்ணாடி முன் நின்று தினம்
கேட்டு சிரிப்பாள்?

"நானென்ன அப்படி அழகா?"

எழுதியவர் : செல்வமணி (22-Jan-16, 9:37 am)
பார்வை : 123

மேலே