ஆடுகள் மேய்க்கும் முருகன்
மலையடிவாரத்தில் அமைதியும் இயற்கையும் சூழ தேவனூர் என்னும் அழகிய கிராமம் ,
இக்கிராமத்தில் விவசாயம் தான் பிரதான தொழில் ,அங்கே முருகன் என்னும் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,முருகனுக்கு சொந்தம் என்று யாருமில்லை ,இருந்தவர்களும் இறந்து விட்டனர்,முருகனின் தாய் தந்தையரும் முருகன் சிறுவனாக இருந்த போதே இறந்து விட்டனர்,
காலையில் ஆடு மேயப்பதும் பொழுது சாய்ந்த பின்னே ஆடுகளை பட்டியில் கட்டுவதும் என போய்க் கொண்டிருந்தது முருகனின் வாழ்க்கை,
முருகன் இயற்கையிலேயே அன்பு நிறைந்தவன் ,காக்கை குயில் என அனைத்து உயிர்கள் மீதும் அன்பு கொண்டவன்
முருகனை பற்றி தெரிந்து கொண்ட சில கயவர்கள் இவனின் அப்பாவி தனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டனர்
முருகன் பத்து பணிரென்டுக்கு மேற்ப்பட்ட ஆடுகள் வைத்திருக்கிறான் முருகன் பள்ளி பக்கமே சென்றது கிடையாது ,ஒன்று இரண்டுக்கு மேல் கணக்கும் தெரியாது ,
கயவர்கள் வெளியூரிலிருந்து பட்டியில் கட்டிய ஆடுகளை திருடுவது தான் அவர்ளின் பொழப்பே,
திருடிய ஆடுகளை எவரும் வாங்க மறுத்து விட்டனர் ,அதனால் திருடிய ஆடுகளை விற்க கயவர்களே ஒருவன் ஆட்டுக் காரன் போன்றும் மற்றொருவன் ஆட்டை வாங்குபவன் போன்றும் வேடமிட்டு மிக குறைந்த விலை என்று கூறி ஆதிக விலைக்கு முருகனிடம் விற்று விடுவர் ,இது இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது,
ஒரு நாள் திருடிய ஆட்டை முருகன் மேய்ப்பதை யாரோ ஒருவர் பார்த்து விட்டு ஊருக்குள் போய் சொல்லி விட்டார்,
ஊர் மக்கள் எல்லாம் முருகன் தான் திருடன் என்று என்னி கொஞ்சம் கூட கருனையே இல்லாமல் முருகனின் கைகளை கட்டி ஒவ்வொருவரும் தர்ம அடி
,,,,,,,,,,,
,விக்னேஷ்