சிறகடிக்கும் பச்சைக்கிளிக்கு

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அதோ தெரிகிறதே
நான் வாழ்ந்த அழகான தோப்பு
தெம்மாங்கு பாடிக் கொண்டிருந்தவள்
நானும் அழகாய் தான் இருந்தேன்
கொவ்வைப்பழ ஆசை கொண்டு
என் தெருக்கோடியில்
அகப்பட்டேன்
பேசும் திறன் நிறையவே உண்டு
ஆனாலும்
வாய் கட்டி வைத்திருக்கிறேன்
என் சிறகுகள்
ஒடிக்கப் படவில்லை
ஆனாலும்
நொண்டியாயிருக்கிறேன்
நான் அழகாய் தான்
இருக்கிறேன்
அழும் போதும்
அழுக்கடையும் போதும்
கூண்டில்லை
ஆனாலும் அடைபட்டிருக்கிறேன்
குரல் இல்லை
ஆனாலும்
ஊமையாய் கதைக்கிறேன்
பெற்றம்மா. ....
என்கிறாள்
இந்த வீட்டுக் குழந்தை
என் குழந்தைகளோ
தாயின்றிய வீட்டிற்குள்
தனிமையில். ........?
- பிரியத்தமிழ் - உதயா -