யாதுமானவள்

மான் விழிப்பேரழகி
மதி மயக்கும் கூந்தல் அழகி
தேவதை போற்றும் தேனிலும் இனிய சுவையழகி...
உன்னை என் இதயத்தில் மனைவியாக சுமக்கிறேன்
உன்னை தொடந்து மூச்சுக்காற்றாக சுவாசிக்கிறேன்
உன்னை உயிரிலும் மேலாக நேசிக்கிறேன்...
தினம் உன்னை மடி தர யாசிக்கிறேன்
மடிய்னில் உந்தன் கூந்தல் விழ கேட்கிறேன்
கூந்தலில் உன் பெயர் எழுதி வாசிக்கிறேன்..
என் துயில் தொடர உன்னாடையை என்னாடையாக கேட்கிறேன்
என்னாடையை உன் பொன்னாடையாக தருகிறேன்
உன் வாடையை என் மலர் வாடையாய் ருசிக்கிறேன்...
என் கூடு என்னிடமிருக்க நான் உன்னில் வசிக்கிறேன்
என் இறுதித்தலையணை உன்மடியதனில் இருக்க பிரார்த்திக்கிறேன்
இதுவே என் காதலின் பொக்கிஷமென புறப்படுவேன்...