எந்த னுயிரில் கலந்தவளே

வங்கக் கடலின் கரையினிலே
திங்க ளொளிரு மிரவினிலே
மங்கை நீயு முடனிருக்க
பொங்கும் காதல் கவிதைகளே !
அத்தை மகளாய்ப் பிறந்தவளே
அத்தா னென்னைக் கவர்ந்தவளே
புத்தம் புதிய மதுமலரே
முத்த மழையால் நனைத்துவிடு !
கெஞ்சிக் கேட்டும் மனமிலையோ
கொஞ்சி யழைத்து மிளகலையே
வஞ்சிக் கொடியே துணைவருவாய்
நெஞ்சம் முழுதும் படர்ந்திடுவாய் !
எந்த னுயிரில் கலந்தவளே
சிந்து மழகில் மதிமுகமே
உந்தன் நினைவால் பிதற்றுகிறேன்
சொந்தங் கொள்ள வரந்தருவாய் !