திருப்பூவணம் பதிகம் 4
"வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே" 4
பதவுரை:
வெண்பொடி பூசனை – வெண்மையான திருநீறு பூசியவனை;
வினை – பாவம்,
பாவநாசன் - சிவனுக்கொரு பெயர்.
பொருளுரை:
நறுமணம் கமழும் மலர் மாலைகளை அணிந்துள்ள மார்பில் திருவெண்ணீறு பூசியவனை, சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவனை, மலர்தூவி, பூசனை செய்து புகழும் அன்பர்களின் பாவங்களை நாசம் செய்பவனாகிய சிவபெருமானை, அவன் திருவடிகளைத் தொழும் அன்பர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும்.