காவிரியாய் ஓர் கவிதை ஆறு 2

காவிரியாய் ஓர் கவிதை ஆறு   2

கவிதையின் பக்கங்கள் நெஞ்சில் திறந்திட
கற்பனை வானமும் உள்ளே விரிந்திட
கார்குழலாள் மெல்ல நடந்து வரஅங்கே
காவிரியாய் ஓர்கவிதை ஆறு
----பல விகற்பம்

தண் விழியாள் மெல்ல நடந்து வரஅங்கே
விண்முகில் தன்பொழிவின் காவிரி போலுமோர்
கற்பனை ஆறொன்று உள்ளே பெருகிட
அற்புதப் பக்கமாய்நெஞ் சம்

----கவின் சாரலன்

---இரு விகற்ப இன்னிசை வெண்பா
ண் ண் முதல் இரு அடிகளின் எதுகை ---ஒரு விகற்பம்
ற் ற் பின்னிரு அடிகளின் எதுகை ---இரண்டாவது விகற்பம்
ஆதலினால் இது இரு விகற்ப இன்னிசை வெண்பா
அடுத்து இதையே நேரிசையாய் பார்ப்போம்
யாப்பு ஆர்வலர்கள் பயன் பெறலாம் .

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-16, 10:08 am)
பார்வை : 88

மேலே