எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு
மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது
நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?
எக்ஸ்: ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல.
நீதிபதி : அப்புறம்?
எக்ஸ்: எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்?
நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும்.
எக்ஸ்: அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன்.
நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க?
எக்ஸ் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ங்கொய்யால.... ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் எசமான் இப்பிடி ஆயிடுச்சு
.
நீதிபதி : ????????????!!!!!!!!!!!!!!!