தொலைக்காட்சி தொடர்கள்

மனைவி
விஜய் டி.வி. பார்த்து கொண்டிருந்த
நேரம்

கவிதை வடிக்க நினைத்த போது
பல எண்ணங்கள்
“நடுவுல கொஞ்சம் டிஸ்பர்ப் பண்ணுவோம்”
என்று தடைகள் செய்ய

“கனக்சன்” இல்லாமல் வார்த்தைகள் பல வர
நடப்பது என்ன
“நடந்தது என்ன" என்று அறியாமல்
தவித்தேன்
இனி கவிதையில்
“கலக்க போவது யாரு" என்று அறியாமல்
“டைம் பாஸ்" செய்து கொண்டிருந்தேன்

“ஒரு வார்த்தை ஒரு லட்சம்" யோசனைகள்
விடு என் வார்த்தைகள் சரி செய்யவேண்டுமே …

சரி செய்ய
“டாக்டர் டாக்டர்” என்று
யாரை அழைப்பது என்று
நினைப்பு உடன்
“பாட்டி வைத்தியம்" ஞாபகம் வர

கவிதைகளில் வடிப்பது
“அது இது எது”வென்று
புரியாமல்
உணர்வுகள் ஒன்றுகொன்று
போட்டி போட்டது
“நீயா நானா”வென்று

இந்த நேரத்தில் மனைவி சன் டி.வி.க்கு மாற ….

“நிஜம்” எதென புரிய
“வாங்க பேசுலாம்” என்று
எண்ணங்களில் ஆரம்பித்தது
“அரட்டை அரங்கம்”
“அமுத மொழிகள்" கவிதையில்
வர வேண்டும் ஒரு எண்ணம்
“சொல்லுங்கண்ணே சொல்லுங்க"
மனதிடம் வார்த்தைகளைக் கேட்க
ஏன் “நகைசுவை விருந்து”
படைக்கலாமே என்று ஒரு எண்ணம்
அல்லது கவிதையில் “குட்டி சுட்டிகள்"
செய்யலாமே ஒரு எண்ணம்
இந்த “மகாபாரதம்" முடியும் முன்

மனைவி கலைஞர் டி.வி.க்கு மாற்ற …..

“நெஞ்சு பொறுக்குதில்லையே” ஒரு
வார்த்தையும் வரவில்லையே என்று
“தேனும் பாலும் ” கலந்து கவிப்பாட
நினைத்தோமே
வார்த்தைகள் “நலம் பெற" அடுத்து
“மானாட மயிலாட" உடன்
வார்த்தைகள் ஆட
“விடியலே வா" எண்ணி
பாரதியின்
“ஓடி விளையாடு பாப்பா"
பாடல் படித்தேன்


இப்போது மனைவி ஜெயா டி.வி.க்கு மாற ….

அடிக்குமா பழைய
“ஜாக்பாட்" என்று நினைக்க
“தேன் கிண்ணம்" பழைய
பாடல்களை இரசிக்க
ஆரம்பித்து விட்டேன்

கவிதை எழுதும் எண்ணம்
கொஞ்சம் தள்ளி போனது

திரும்பி நினைத்தேன்

கருத்துகள் கணத்தில் ஒளிர
வார்த்தைகள் வளைய வடிவுற
சாரத்தை சாரும் ஒலிக்க
“ஒளியும் ஒலியும்” ஆக இந்த அறு(சு)வை கவிதை

- செல்வா

எழுதியவர் : செல்வா (24-Feb-16, 7:11 am)
சேர்த்தது : செல்வா
பார்வை : 562

சிறந்த நகைச்சுவைகள்

மேலே