பூமா தேவியின் பிள்ளை

மேகங்களும் பூமா தேவி அழகில் மயங்கி
ஆனந்தத்தினால் கண்ணீரை மழையாக சிந்த
சூரிய தேவனும் தன் பங்குக்கு பூமா தேவி மீது
வெளிச்சம் கொடுத்து அழகு சேர்க்க
சூரிய தேவனும் களைத்து போக
அந்த இடத்துக்கும் சந்திர நிலாவும்
வந்து பூமா தேவியின் கருமை நீக்கி ஒளி கொடுத்து அழகுரை செய்ய
வானத்தின் வின் மீன்களும் அழகு கொடுக்க
வானமும் பூமா தேவி மீது மதி மயங்கி
தன் ஒளி மின்னல் மூலம் பூமா தேவியை இடைஇடையே எட்டி பார்க்க.
பூமா தேவியும் கருவும் கொண்டு
இயற்கையை என்னும் பிள்ளையை பிறக்க வைத்தாள்

எழுதியவர் : கலையடி அகிலன் (26-Feb-16, 4:20 am)
பார்வை : 143

மேலே