முருகனை எண்ணுவோம்

முருகனை "எண்ணு"வோம்.!

ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே வானையை #1*2
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்
ஈரிரண்டு# நால்வேதத் துட்பொருளை உணர்ந்தபின் #2*2
பிரணவத்தை ஈசர்க்கு போதித்தவன்

மூவிரண்^ டாறான முறுவல் முகங்களுடன் ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^ எண்திக்கும் அரக்கரை அழித்திடவே ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.

ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும் ^5*2
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^ பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?

ஏழிரண்டு^ பதினான்கு இரவுகள் வளர்ந்திட்ட ^ 7*2
முழுமதியைப் பழித்திடும் வதனத்தினன்.
எட்டிரண்டு^ பதினாறு செல்வமும் சிறப்புடன் ^ 8*2
கிட்டிடும் குமரனைத் துதிப்பவர்க்கே.
.
சித்தர்க ளீரொன்பதில்^ மூத்தமுனி அகத்தியர்க்கு ^ 9*2
முத்திதரும் மந்திரங்கள் போதித்தவன்.
பூதங்கள், புலன்,பிராணன் , இந்திரியங் கள்என்ற ^ 10*2
பத்திரு வத்தையும்^ உருவித்தவன்.

எண்கணக்கி லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி
பண்புனைந் துன்புகழ் பாடினேனே!
என்கணக்கு இப்பிறவி. யில்முடியு முன்னமே
எனையாண்டு அருள்புரிவாய் குமரவேளே!

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (26-Feb-16, 7:57 pm)
பார்வை : 46

சிறந்த கவிதைகள்

மேலே