இப்படியும் நடக்குமா
அவனுக்கும் அவளுக்கும்
இடையில் நட்பு கூட இல்லை
அதனால் ..
அவர்களுக்குள் எந்த விதமான
ஒட்டுதலும் இல்லை
இருந்தும் கூட
ஒரு நாளில் ஒருமுறையாவது
பார்க்கத் தோன்றிடும்
இருவருக்கும்
யோசித்தார்கள் இருவரும்
ஒரே சமயத்தில்..
ஒரே மாதிரி..
அவளுக்கு இவனும்
இவனுக்கு அவளும்
தொலைபேசியில் அழைப்பு விடுத்திட
கிடைத்த பதில் ..
"நீங்கள் அழைக்கும் நபர்..
தற்சமயம்..
வேறு ஒரு நபரோடு
பேசிக்கொண்டிருக்கிறார்..
தயவு செய்து சிறிது நேரம்
கழித்து தொடர்பு கொள்ளவும்"..
என்று.
ச்சே..
இவனிடம் தப்பித்தோம்
என்று அவளும்..
ச்சே..ச்சே..
இவளிடம் மாட்டாமல் போனோமே
என்று அவனும்..
திருப்தியாகவே
அப்போது தான் பிறந்திருந்த
தங்களது காதலை
முடித்துக் கொண்டார்கள்..
..
முதல் முறையாக வீட்டில்
வாங்கி தந்திருந்த
கைப்பேசிகள்
இருவரிடமும் அணைந்து போயின..
முதல் அழைப்புக்குப் பின்!
..
என்னாலும் நம்ப முடியவில்லை..
இப்படிக்கூட நடக்குமென்று..
இந்தக் காலத்தில்!