ருத்ரன் 85 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ருத்ரன் 85
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  21-Aug-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Feb-2016
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  26

என் படைப்புகள்
ருத்ரன் 85 செய்திகள்
ருத்ரன் 85 - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2016 7:23 am

எரியும் மனசு எவருக்கும்
--பிறப்பின் பிரிவுகள் கண்டு !
சாதிமத கொள்கை வேறுபாடு
--ஏழை பணக்காரன் பாகுபாடு !
ஏற்றத் தாழ்வுகள் தழைத்திட்ட
--நிலைகண்டு எரியும் மனசு !

எரியும் மனசு எவருக்கும்
--என்றும் தொடரும் இங்கு !
பகுத்து அறியாத உள்ளங்கள்
--வகுத்து வாழாத இதயங்கள் !
தொடரும் மூட நம்பிக்கை
--நிலைகண்டு எரியும் மனசு !

எரியும் மனசு எவருக்கும்
--நிலை கெட்ட மாந்தரால் !
மாறா மடமை செயல்களும்
--தவறிடும் கடமை உணர்வும்
அழிவிற்கு அடித்தளம் ஆகும்
--நிலைகண்டு எரியும் மனசு !

எரியும் மனசு எவருக்கும்
--தடம் மாறிய அரசியலால் !
வன்முறை ஒன்றே வழியென
--வாழும் நீசர்கள் நாட்டில்
அறவழி

மேலும்

மிகவும் அருமையான தலைப்பு நேர்த்தியான படைப்பு. இன்றைய ஏற்ற தாழ்வுகளுக்கு உங்கள் வரிகளில் அனைவருக்கும் தெளிந்த சிந்தனை மலர செய்யட்டும். 18-Mar-2016 11:46 am
அய்யோ சற்று அதிகமாக உள்ளது மிகவும் நன்றி நண்பரே 08-Mar-2016 9:48 pm
ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ படித்த உணர்வு ..To be or Not to be..போல ! 08-Mar-2016 5:29 pm
மிக அருமையாக கூறினீர்கள் சர்பான் . மிக்க நன்றி 08-Mar-2016 2:41 pm
ருத்ரன் 85 - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2016 7:23 am

எரியும் மனசு எவருக்கும்
--பிறப்பின் பிரிவுகள் கண்டு !
சாதிமத கொள்கை வேறுபாடு
--ஏழை பணக்காரன் பாகுபாடு !
ஏற்றத் தாழ்வுகள் தழைத்திட்ட
--நிலைகண்டு எரியும் மனசு !

எரியும் மனசு எவருக்கும்
--என்றும் தொடரும் இங்கு !
பகுத்து அறியாத உள்ளங்கள்
--வகுத்து வாழாத இதயங்கள் !
தொடரும் மூட நம்பிக்கை
--நிலைகண்டு எரியும் மனசு !

எரியும் மனசு எவருக்கும்
--நிலை கெட்ட மாந்தரால் !
மாறா மடமை செயல்களும்
--தவறிடும் கடமை உணர்வும்
அழிவிற்கு அடித்தளம் ஆகும்
--நிலைகண்டு எரியும் மனசு !

எரியும் மனசு எவருக்கும்
--தடம் மாறிய அரசியலால் !
வன்முறை ஒன்றே வழியென
--வாழும் நீசர்கள் நாட்டில்
அறவழி

மேலும்

மிகவும் அருமையான தலைப்பு நேர்த்தியான படைப்பு. இன்றைய ஏற்ற தாழ்வுகளுக்கு உங்கள் வரிகளில் அனைவருக்கும் தெளிந்த சிந்தனை மலர செய்யட்டும். 18-Mar-2016 11:46 am
அய்யோ சற்று அதிகமாக உள்ளது மிகவும் நன்றி நண்பரே 08-Mar-2016 9:48 pm
ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ படித்த உணர்வு ..To be or Not to be..போல ! 08-Mar-2016 5:29 pm
மிக அருமையாக கூறினீர்கள் சர்பான் . மிக்க நன்றி 08-Mar-2016 2:41 pm
ருத்ரன் 85 - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2016 7:35 am

பணிகள் முடிந்தன
பாதியில் நின்றது இரயில்
தேர்தல் விதிமுறை அமல் ....1

வீட்டில் முளைத்தன
வாங்கிய நெல் விதைகள்
நிலங்களை காணவில்லை ...2

அலகில் குச்சிகள்
தவிக்கிறது சுற்றும் பறவை
மரங்கள் இல்லை ....3

நகரெங்கும் வெள்ளம்
அழுதது மழை நீர்
ஒதுங்கிட இடமில்லை ...4

சுவாசிக்கும் மனிதன்
சுகமிலா நிலை நாளும்
காற்றில் கலப்படம் ...5

( பொதுவான கருத்தில் எழுதியது )
++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++

சீர்கெடும் சமுதாயம்
சிதறிடும் நெஞ்சங்கள்
எண்ணத்தில் கலப்படம் ...1

முளைத்திடும் சந்தேகம்
முரண்படும் உணர்வுகள்
முறிந்திட

மேலும்

உங்களின் புரிதலுக்கும் உணர்வுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செல்வரஜ்ஜ் 30-Mar-2016 8:55 pm
அய்யா தங்களின் பொதுவான கருத்தும், அனுபவத்தில் குறிபிட்டதும் இன்றைய நவீன உலகையே சாடுகிறது ... 11இல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் வீட்டில் முளைத்தன வாங்கிய நெல் விதைகள் நிலங்களை காணவில்லை ...2 அலகில் குச்சிகள் தவிக்கிறது சுற்றும் பறவை மரங்கள் இல்லை ....3 நகரெங்கும் வெள்ளம் அழுதது மழை நீர் ஒதுங்கிட இடமில்லை ...4 சுவாசிக்கும் மனிதன் சுகமிலா நிலை நாளும் காற்றில் கலப்படம் ...5 இருவிழிகள் ஒரேபார்வை இயற்கையின் நியதி இருவிழி .இருபார்வை .இன்று ! ...6 எனக்கு பிடித்த மனதிற்கு நெருக்கமான கவிதைகள் 29-Mar-2016 2:20 am
மிகவும் நன்றி நண்பரே 08-Mar-2016 9:46 pm
மிகவும் நன்றி பனிமலர் அவர்களுக்கு உங்கள் ஊக்குவிக்கும் பண்பும் அன்பும் என்னை மகிழ்விக்கிறது 08-Mar-2016 9:45 pm
ருத்ரன் 85 - vaishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2016 8:00 am

நான் உழைக்கும் வர்க்கம்
இலவச டீவியில் இலவசத்தை
அனுபவிக்கும் கூட்டமல்ல ..

மோட்டா குடிகாரன்
மோட்டார் வண்டியில் சென்று
எதிரேவருபவனை கொன்று
எமனை தானே அழைத்துகொண்டு
மடிபவனுக்கு நீ கண்ணீர் விட்டு
என்ன பயன்?

குடியானவன் தான்
கோவிலையே பாராமரிக்கிறார்கள்
இது தெரியாத உனை என்ன சொல்வது?

தப்பையே தொழிலாக செய்துக்கொண்டு
இருக்கும் சிலநபர்களால்
என் தேசத்தை குறைசொல்ல
எவனுக்கும் தகுதியில்லை.

என்தேசத்திலேயே எனக்கு
எல்லைவகுக்கும் தேசவிரோத
கூட்டங்களால் தான்
இந்த கோஷங்கள்

உலகத்தில் சாதி,மத,நிற
பாகுபாடில்லாத நாட்டைக்காட்டு.

வெமூலாக்களும்,கன்ஹயாகளும்
சாதி சொல்லி அனுபவிக்கும் ச

மேலும்

நன்றி பிரியா.. 17-Mar-2016 7:06 pm
பாரத தாயும் நானும் ஒரே மதம் பாரத மதம். பாரதத்திற்கே சொந்தமான மதம்.. ..சிறப்பு வைஷு....!! 16-Mar-2016 2:52 pm
இது போன்ற அவமானப்படுத்தும் செயலுக்கு வெட்கப்படவேண்டும் / வன்மையாக கண்டிக்கிறேன், மேலும் இது போன்ற நேரங்களில் பாதிக்கப்படும் மாணவன் / மாணவர்கள் தவறான முடிவிற்கு போகக்கூடாது, மனத்திடத்துடன் இப்போது இருக்கும் சலுகையை பயன் படுத்துவதில் தவறு இல்லை என்ற நிலையில் அவர்(கள்) நிற்க வேண்டும், மற்ற விஷயங்கள் அரசியல் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பை பொருத்தது - மு.ரா. 08-Mar-2016 6:12 pm
நன்றி.. நாம் அனைவரும் தேசத்திற்கு தலைவணங்குவோம்... வந்தே மாதரம் 08-Mar-2016 5:59 pm
ருத்ரன் 85 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2016 11:00 am

யானை மண்ணை
தானே தலையில்
வாரி இறைப்பதில்
விவரம் உண்டு
ரோமங்கள் இல்லை
உடலில் என்பதால்
சூரிய ஒளியினால்
ஏற்படும் வியாதியை
தோலுக்கு வராமல்
காத்திடத் தான்..
இயற்கையான
சுபாவம் ..
யானைகளுக்கு..
சில மனிதரைப் போல
தன்னை காத்துக் கொள்ள
மண்ணையும் வாரி
இறைத்துக் கொள்வதில்
அவைகளுக்கு சுகமும் கூட..
பாவம் அல்ல யானைகள்!

மேலும்

பகுத்தறிவின் சிந்தையில் ஐயறிவின் விந்தை 08-Mar-2016 11:04 am
ருத்ரன் 85 - MSசுசீந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2016 12:47 am

நான் அரக்க வம்சம்- எனக்கு இன்னொரு முகம்.

இரவல்லி வாசத்தில்
 தாமரைகள் தலைகுனிய
நீட்டிய கூட்டல் விகிதங்கள்
சொல்லிக் கொள்ளாமல்
ஒன்றையொன்று
அடித்துச் சாகும்

தெறிகாலை பனிப் புயலில்
தொலைத்த வெளிச்ச பவனங்களில்
முகடு தட்டிய
மலை மேகங்கள்
மந்திரித்த
மயக்கத்தில் நோகும்.

தவிடுகளின்
 கூட்ட நெரிசலில்
சிக்குண்ட புழுப் பயணம்
சாரா வாதங்களில்
மேடைதோறும் வந்து 
வாதிட்டு  போகும்

பட்டறைப் பவனிகளில்
சிவந்தெழுந்த வக்கிரங்கள்
சிற்றுளை(சிறு+துளை ) ஊர்வலத்தில்
சிதறிப்போய் வேகும்

இனி ஒரு விதி செய்யும்வரை
செம்மண்ணும் கருமண்ணும்
 கலக்காத
ஆலகாலச் சாலையில்
ஊழிச் சகடம் ஓட்டிவந்த
ஊழல்காரன் வீட்டில்
சத்தியம்
சமையல் ஆகும்.

சுசீந்திரன்.

மேலும்

எண்ணம் என்பது தெரிகிறது ..கவிதையில் பதியாமல் இங்கே பதிந்தது சரியா தவறா என்பது புரியவில்லை ..இருப்பினும் புதிய வார்த்தைகள்..பிரயோகித்த விதம், எல்லாமே தனி ஆவர்த்தன அட்டகாசம் ஐயா 07-Mar-2016 3:05 pm
ருத்ரன் 85 - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2016 7:52 pm

இயற்கையையும்
இலக்கியங்களையும்
நுகர்ந்து வாசித்த எனது
இரசனைச் சிறகுகளிலிருந்து
ஓர் இறகு பிரிந்து
கவிதைப் பறவை என்றாகியிருக்கும்.

பல நூறுகோடிகளின்
மழைத்துளியிலிருந்து
ஒரு மழைத்துளியினை
களவாடிய எந்தன்
இதயப் பாலைவனம்
இலக்கியப் பூக்களை வளர்த்திருக்கும்.

தனிமைக்கு
கற்பனையைத் துணையாக்கி
காசி நதியோரத்தில்
உலாவியப்போது
மிதந்தோடிய
அவளின் நினைவுப்
பிணங்கள்
என் காதலை நலம்
விசாரித்து பயமுறுத்தியிருக்கும்.


இப்படியாகத்தான்
யானையை நினைத்து
கழுதையை வரைந்த கதையாய்
எதையோ எழுத நினைத்து
எதை எதையோ எழுதும்
என் பேனா
இலக்கியம் படைத்துவிட்டதாக
கர்வம் கொண்ட

மேலும்

என்னுள் ஒரு கவிஞனைப்போல ஒரு கிறுக்கன் இருக்கின்றான். மன்னியுங்கள் என் அபிமானக் கவிஞர்களே..! .....தெரியுமே..... படைப்பு பலவற்றை உணர்த்துகிறது அண்ணா.....!! 05-Mar-2016 12:48 pm
இப்படியாகத்தான் யானையை நினைத்து கழுதையை வரைந்த கதையாய் எதையோ எழுத நினைத்து எதை எதையோ எழுதும் என் பேனா இலக்கியம் படைத்துவிட்டதாக கர்வம் கொண்டாடவும் செய்யலாம்... .. தமிழ் கவிதையுலகின் மீது சொடுக்கி விட்டிங்க உங்க சாட்டை ..உண்மையும் கூட ன்னு நினைக்கிறேன் 04-Mar-2016 12:40 pm
உங்கள் கருத்து மிக வீரியம். உண்மை. அழகு. வாழ்த்துக்கள் சர்பான். உங்கள் லட்சியம் இலக்கியம் எனில் அதில் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள். அயராத உழைப்பும்.. பல மொழி இலக்கியங்களை வாசிக்கும் பழக்கமும் உங்களை உச்சத்திற்கு கொண்டுச் செல்லும். 29-Feb-2016 12:08 pm
காலத்தின் விளிம்பில் பலர் இலக்கியம் எனும் ஜாதியில் சேர்கின்றனர்..வாழ்வின் ஓட்டத்தில் சிலர் பொழுதை கழிக்கும் நேரமாக இலக்கியம் எனும் ஊரில் குடிசை கட்டுகிறார்கள்..பிறந்த நொடியில் தலை மேல் இருந்த எழுத்தை வாசித்து ஒருசிலர் இலக்கியம் எனும் குடிசையில் சாகும் வரைக்கும் வாழ நினைக்கிறார்கள்..இடம் பொருள் எண்ணம் எல்லாம் இலக்கியம் மேல் ஆர்வம் கொண்டவனின் பிரசவத்தில் தாக்கம் செலுத்துகிறது நான் நிகழ்கால பள்ளி வாழ்க்கையில் அனைவரின் வார்த்தைகளாலும் பித்தன் என்ற பாராட்டை பெற்றவன்.கண்கள் கலங்கி வாழ்க்கையில் தோற்று முதல் வெற்றி எப்போது கிடைக்கும் என்று ஏங்குபவன் மீள் பதிவை போல் இலக்கியம் மேல் ஆர்வம் கொண்ட ஆயுளுக்கும் மரணம் எனும் சோகம் நினைவில் தினந்தினம் வாங்கப்படும் 26-Feb-2016 11:59 pm
ருத்ரன் 85 - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2016 10:40 am

ஆடிவந்த தென்றலோர் தோட்டக் கொடியினில்
வாடிநின்ற ஒர்மலர்தன் னில்சுவாசம் தந்திட
பாடிவந்த தோட்டக்கா ரன்நீரைப் பாய்ச்சிட
வாடிநின்ற பூமலரும் தன்னித ழைவிரிக்க
தேடிவந்தாள் பூங்கொடி யாளங்கே புன்னகையில்
வாடிய பூவைப் பறித்தனள் மென்விரலால்
ஆடிடு தேதேன் மலர்

----கவின் சாரலன்
இது ஒரு விகற்ப ப ஃறொடை வெண்பா
2அடி குறட் பா 3அடி சிந்தியல் வெண்பா 4 அடி அளவடி வெண்பா
5 அடி முதல் 12 அடி வரை ப ஃ றொடை வெண்பா என்பது தமிழ் யாபிலக்கண
நெறி முறை
ஆர்வலர்கள் பயிலுக முயலுக

மேலும்

இனிய சொல்லோசை கவிதைக் கருத்து இரவின் நிசப்தத்தில் பூங்காற்று தீண்ட மரத்தின் கணுவில் ஒளிஅய் யறிவு வரத்தினில் வான்மழை அம்மலை மோத‌ விரலினில் காதல் மழை -----உங்கள் கவிதை ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாக ... மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன், கவின் சாரலன் 04-Mar-2016 10:53 am
இரவினின் நிசப்தத்தில் பூங்காற்று தீண்டிட மரத்தின் கணுக்களில் ஐயறிவு ஒளிந்திட வரத்தின் வான் மழை மலையோடு மோதிட விரலின் நகத்தில் காதலோர் காரம் 03-Mar-2016 11:06 pm
ஒரு விகற்பக் குறள் வெண்பா பாவனைவ தில்மதியும் பண்புள்ள சங்கரனும் பூவனைய யாப்பினில் நேர். பூவனைய - பூப்போன்ற 03-Mar-2016 11:01 pm
ஒரு விகற்பக் குறள் வெண்பா பாவனைவ தில்மதியும் பண்புள்ள சங்கரனும் பூவனைய யாப்பினில் நேர். பூவனைய - பூப்போன்ற 03-Mar-2016 11:00 pm
ருத்ரன் 85 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2016 5:59 pm

எனக்கு என்னவோ உன்னை
பார்க்கத் தோன்றவே இல்லை
எதற்காக உன்னை
பார்த்தே ஆக வேண்டும் நான்
என்பதும் தெரியவில்லை
என்ன வேலை செய்கிறாய் என்று
நீ என்னை கேட்ட போது
ஆட்டோ ஒட்டுகிறேன்
என்றுதானே சொன்னேன்..
அதுவே செய் ..நல்லது
என்று சொல்லிவிட்டு
எதற்காக சிரித்தாய் ..
அதுவும் புரியவில்லை..
ஆனால்..
அன்றிலிருந்து
எனக்கு கையும் ஓடவில்லை..
காலும் ஓடவில்லை..
எனது ஆட்டோவும்
வழக்கமான ரூட்டில் ஓடவில்லை..
உன் வீடு உள்ள வீதிக்கே
வந்து வந்து போகிறேன்..
இதற்கு பெயர் என்ன..
காதல் என்று மட்டும்
சொல்லி விடாதே ..
பயமாக இருக்கிறது..
நிறைவேறாமல் போய் விடுமோ என்று..
உன்னை பிடிக்கிறது என்ற

மேலும்

நல்ல புரிதலுக்கு நன்றி Friend ! 04-Mar-2016 3:00 pm
இது அனுபவிச்சது அய்யா..சரியாக அந்த வரியில் வந்து யதார்த்தம் உணர்ந்தீர்கள் ..Thanks 04-Mar-2016 2:59 pm
இடம் அறியாமல் மனங்கள் திருடப்படலாம் மலர்கள் இன்றி தோட்டமும் இலைகளால் அழகாய் தோன்றலாம் காதல் எனும் உணர்வு நெஞ்சுக்குள் வந்தால் நீயும் அவளாக தெரிவாய் கண்ணாடியில் அல்ல நிழலில் 03-Mar-2016 11:41 pm
உன்னைப் பிடிக்கிறது என்று சொல்லிவிடு போதும் __யதார்த்தமான சுவாரசியங்கள் .இனிமை வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 03-Mar-2016 10:20 pm
ருத்ரன் 85 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2016 11:20 am

தெருவோரம் பூச்சரம்

வாடியபடி

என்னை கவனிக்கிறது !



செவ்வாய் தோஷம்

உனக்காம்

எனக்கு சந்தோஷம்..!



எனக்கும் உண்டாம் ..!

பேசட்டுமா ..

உன் வீட்டில் ?
..

மேலும்

அசத்துறீங்க..அய்யா.. சந்தோஷத்தில் குதிக்கிறேன் மெய்யா ! 03-Mar-2016 7:30 pm
கவிதை இண்டரஸ்டிங் செவ்வாய்தோ ஷம்ஜாத கத்தில் உனக்கானால் செவ்வாயில் செந்தமி ழாம் செவ்வாய்தோ ஷம்ஜாத கத்தில் எனக்கும்தான் பேசட்டு மாஉன்வீட் டில் ----உங்கள் கவிதை குறட் பாக்களில் வாழ்த்துக்கள் கவிப்பிரிய ருத்ரன் அன்புடன்,கவின் சாரலன் 03-Mar-2016 6:37 pm
ருத்ரன் 85 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2016 11:14 am

இழுத்து விடும்
எனது மூச்சுக் காற்றின்
இளஞ்சூட்டில் ஒளிந்திருக்கும்
நிலவின் குளிர்ச்சியை
நீ மட்டும்தானே அறிந்தாய்..
இது வரையிலும்
நிலவும் கதிரும்
இரட்டைத்தண்டவாளங்கள்
உனக்கும் எனக்குமிடையில்
ஒன்றில் நீ உரசிப் போவது
அடியில் தேயும்
என் நினைவுகளைத்தான்..
எத்தனை முறை வேண்டுமானாலும்
உரசிப் போ..
உயிர் என்னுள்
ஒட்டியிருக்கும் வரை!

மேலும்

Thanks Friend 04-Mar-2016 12:05 pm
தேகம் வருடும் சுவாசக் காற்றில் கலகம் செய்யும் தீ மூட்டம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Mar-2016 11:33 pm
உண்மையாகவா..சந்தோஷம் ..Thanks Friend 03-Mar-2016 5:20 pm
மனசுல பட்டது ..எழுதி விட்டேன்..உங்க feedback பற்றி சந்தோஷம் ..தொடர்ந்து எழுதலாம் போல நினைக்கிறேன் .Thanks Friend 03-Mar-2016 5:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை
மேலே