பெண்கள்

பெண்கள்

மானுட தேசத்தின்
மங்காத சுடரொளிகள் ;
மரணத்தின் காலடியில்
ஜனனத்தை விதைப்பவர்கள் ;

கனவுகளில் சிறகடிக்கும்
சிறிது நேர சிறு வயது
பட்டாம் பூச்சிகள்;

இளமை எனும்
நந்தவனத்தில் வாடும் வண்டிற்காக
பூத்து குலுங்கும் மலர் கொத்துகள் ;

வானுயர்ந்த கனவுகள் கண்களில் இருந்தும்
நாணத்தில் தலைகவிழ்ந்து
பூமியை மகிழ்விக்கும்
புதுமை பெட்டகங்கள் ;

கருமை கூந்தலில்
தென்றலை குடிவைத்து
எங்கும் மணம் வீசும்
தோட்டத்து மல்லிகைகள் ;

இரவின் இருளை விட
இதயத்தில் இருள் கணத்து ,
சோக இருளின் போர்வையில்
இல்லறம் நடத்தும்
விடியலை தேடாத
விட்டில் பூச்சிகள் ;

மனச்சுமைகள் இருந்தாலும்
மடிச்சுமைகள் தாங்கும்
நேசமிகு சுமைதாங்கிகள் ;

ஒரு கவிஞனின் பார்வையில்
உயிருள்ள ஓவியம்
எழுதபடாத காவியம் ;

தோற்றத்திலும்
முடிவிலும்
உனக்காக அழுகின்ற
அன்பின் மறுஉருவம் ;
அவள் ஜனனத்தின் பிறப்பிடம்
என்றுமே இறைவனின் இருப்பிடம் ;

எழுதியவர் : கவிப்பிரியன் (7-Mar-16, 8:53 pm)
Tanglish : pengal
பார்வை : 158

மேலே