சலாவு 55 கவிதைகள்

தவித்த வாய்க்கு ..
தண்ணீர் தர ...
தலை வலி வந்தால் ..
தைலமிட ..
நோயோடு சென்று ..
பாயோடு படுத்தால் ..
பக்கத்தில் இருந்தது ..
பார்த்திருக்க யாரும் ..
இல்லாத பொழுது ...
தனிமை மிக கொடுமை ..
தனித்தவன் வாழ்க்கை ..
மீளாத்துயர் ..
துன்பம் போக்க ..
துணை இருந்தும் ..
இன்பத்தில் திளைக்க ..
இணை இருந்தும் ..
சிறகொடிந்த சிறு கிளியாய் ..
விட்டு பிரியும் நேரமது ..
மீளத்துயரமது ..
சொந்தங்கள் ஆயினும் ..
பாச பந்தங்கள் ஆயினும் ..
சொத்து பணம் மட்டும் ..
வாழ்க்கை என்றிருக்கும் .
மனங்களை என்ன கூறுவது ..
மனமிணைந்து மகிழ ..
மகிழ்ச்சியில் திகழ ..
மறுக்கும்பொழுதுகளில் ..
சொந்தங்கள் ஆயினும் ..
சோக சுமைகளே ..
தனித்தவன் வாழ்கை ..
........
.................................சலா

எழுதியவர் : (7-Mar-16, 10:02 pm)
பார்வை : 66

மேலே