காலை வணக்கம்
காலை புலர்ந்தது
என்னவளை எழுப்ப
நானனுப்பும் தூது...
சுமந்து செல்கிறது
கைபேசி...
கைபேசியே..
அவள் காதோரம் சென்று
அளறிவிடாதே...
என்னவள்
திடுக்கிடுவாள்
மிருதுவாய் காரம்நீட்டி
கன்னம் தடவி
இனிதே எழுப்பி சொல்
காலை வணக்கத்தை....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
