எனக்கென நீ

எனக்கென நீ உனக்கென நான்
நமக்கென ஒரு வாழ்க்கை வாழ்வோமா

கலையாக நீ கவியாக நான்
கண்ணில் காதல் பகிர்வோமா

விழியாக நீ இமையாக நான்
என்றும் உன்னைக் காப்பேன் கண்ணே

சேயாக நீ தாயாக நான்
உயிரின் உறவாய் உயர்வோமா

மலராக நீ இதழாக நான்
தினமும் புதிதாய் மலர்வோமா

உணர்வாக நீ உடலாக நான்
நீ இல்லாமல் நான் வெறும் சவம் தான் கண்ணே!!!

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (8-Mar-16, 10:48 am)
பார்வை : 207

மேலே