En Ivagai Nilamum Nee
என் ஐவகை நிலமும் நீ
வயலும் வயல்
சார்ந்த இடமும்
குறிஞ்சி
என்
குறிஞ்சி மலர்
நீ
காடும் காடு
சார்ந்த இடமும்
முல்லை
என் கானல்
வாழ்வை
காவியமாக்க
வந்த முல்லை
நீ
மலையும் மலை
சார்ந்த இடமும்
மருதம்
மனமும்
என் மனம்
சார்ந்த இடமும்
நீ
கடலும் கடல்
சார்ந்த இடமும்
நெய்தல்
என்னை
நெய்தவளும்
நெய்பவளும்
நீ
விரிந்த வானமும்
விழாத
மழைத் துளியும்
நிறைந்த இடம்
பாலை
என் பாலைவன
வாழ்வை
பசும்சோலையாக
மாற்றியவள்
நீ