நியாயங்கள் இருப்பின்
பொல்லா உலகம் பொய்யே சொல்லும்
நல்லோர் கூற்றும் நலிந்தே போகும்
மற்றோர் உயிர்க்கு மதிப்பும் உண்டோ
இல்லையென்பார் அதில் இன்பமும் கொள்வார்
கொலையே செய்வார் தம் குலமே வாழ
தவறில்லையென்று தறிகெட்டு திரிவார்
குற்றம் சுட்டுவோர் கூற்றும் அம்பலம் ஏறுமோ?