பிரத்யுக்ஷா பிரஜோத் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரத்யுக்ஷா பிரஜோத் |
இடம் | : |
பிறந்த தேதி | : 02-Aug-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 35 |
தமிழ் மொழி பிடிக்கும். நான் எழுத இந்த பிடித்தமே உந்துகோல். கதைகள் எழுதுவதில் துவங்கினேன். 9 நாவல்கள் எழுதி முடித்திருக்கிறேன். 6 நாவல்கள் புத்தக வடிவில் வெளிவந்திருக்கின்றன. சிறுகதைகளும், கவிதைகளும் எழுதி முகநூலில் பதிவிடுகிறேன்.
எனது தளம் - http://www.prathyukshaprajodh.in/
கண் முன் இல்லாத எதுவும்
கருத்தில் பதிவதில்லை
இருக்கும் யாவும்
உள்ளது போல் நினைவுக் கொள்ளப்படுவதில்லை
நிகழ்வொன்று
சிந்தனை நூறு
திரிந்துப் பெருகிப் பல்கி நிற்கும்
எண்ணங்களடர்ந்த நினைவடுக்குகளின் நெரிசலில்
மூச்சுக்காய்த் திணறுகிறது
உன்னைப் பற்றிய நினைவு
தேசம் அறியேன்
வாசம் செய்யும் முறை அறியேன்
பாஷை அறியேன்
பேசும் வகை அறியேன்
உணவு புதிது
உண்ணும் வழக்கம் புதிது
யாதும் புதிதே யாவரும் அந்நியராயிருக்க
‘நான்’ மட்டும் எனக்குப் பழக்கப்பட்ட பிம்பமாய்
திக்கற்றக் காட்டில் திசைத் தேடித் தொலைகிறேன்
முந்தைய இரவின் மிச்சம்
இந்நாளின் துவக்கம்
இரண்டும் சங்கமித்த அதிகாலை வேளை
சிகைக் கலைத்த இளங்காற்று
நில்லாமல் ஓடி மறையும் காட்சி
ஒன்றோடொன்று தொடர்பில்லா
நினைவுகளின் அணிவகுப்பு
அறியா முகங்களும்
பழகிய தடங்களும்
என்னுள் கரைந்திட்ட நானும்
ஓர் காட்சி
ஓர் சலனம்
ஓர் எண்ணம்
ஓர் தயக்கம்
ஓர் யோசனை
ஓர் தீர்மானம்
ஓர் செயல்
ஓர் விளைவு
ஓர் குற்றவுணர்வு
ஓர் மன்னிப்பு
ஓர் பாடம்
ஓர் திருத்தம்
ஓர் நிறைவு
ஓர் காட்சி
ஓர் சலனம்
ஓர் எண்ணம்
ஓர் தயக்கம்
ஓர் யோசனை
ஓர் தீர்மானம்
ஓர் செயல்
ஓர் விளைவு
ஓர் குற்றவுணர்வு
ஓர் மன்னிப்பு
ஓர் பாடம்
ஓர் திருத்தம்
ஓர் நிறைவு
பொல்லா உலகம் பொய்யே சொல்லும்
நல்லோர் கூற்றும் நலிந்தே போகும்
மற்றோர் உயிர்க்கு மதிப்பும் உண்டோ
இல்லையென்பார் அதில் இன்பமும் கொள்வார்
கொலையே செய்வார் தம் குலமே வாழ
தவறில்லையென்று தறிகெட்டு திரிவார்
குற்றம் சுட்டுவோர் கூற்றும் அம்பலம் ஏறுமோ?
கருவறையிலிருந்து உயிருடன் வெளி வர போராட்டம்
சமூகத்தை புரிந்து சுற்றியிருக்கும் ஆபத்துகளை உணர்ந்து
தன்னை காத்துக் கொள்ளும் தற்காப்பு முறைகளை
தானே கற்றுத் தேறும் திறன்
கற்றல் கற்பித்தல் இரண்டிலும் தலைசிறந்து விளங்கும் ஆற்றல்
சேயாகி தாரமாகி தாயாகி
என்றும் பிறர் நலன் கருதி
தனக்கென்று ஒரு பாதை அமைத்து
முத்திரை பதிப்பாள் பெண்ணிவள் !
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !
என் பாதம் நனைக்க எத்தனிக்கிறாய்
நனையாமல் ஒதுங்க முயல்கிறேன்
உன் நுரை தீண்டிய மணலில்
மென்மையாய் தொட்டு பின் கொஞ்சமாய் உள் வாங்கிய
என் பாதம் விட்டச் செல்லும் பாதச்சுவடுகளை
பலம்கொண்ட மட்டும் தடம் தெரியாமல் அழித்துச் செல்கிறாய்
ஒட்டாத என் மீது கொண்ட கோபமா?
என்னால் அழிக்க முடியுமென்ற கர்வமா?
இது என் இயல்பென்று எடுத்துரைக்கும் முயற்சியா?
எதை நிலைநாட்ட விரும்புகிறாய்?
ஒரு நொடி ஆழமாய் பதிந்து
மறு நொடி மாயமாய் மறையும் சுவடின்
விந்தைக் கண்டு ஏக்கம் கொள்கிறேன்
மறைய வாய்ப்பிருந்தால்....
மேகக் கூட்டங்களின் கருமை விடை பெரும் முன்
குயிலோசையின் இனிய காணத்தால் துயில் எழல்
ஆவி பறக்கும் சிற்றுண்டி
பறந்து செல்லும் வாகனம்
வளைவு நெளிவுகொண்ட பாதை
பழகிய பணி
சிநேக புன்னகை உதிர்க்கும் டீக்கடை அண்ணா
ஒற்றை சொல் நல விசாரிப்பு
நேரமின்மையின் பொருட்டு முற்றுப் பெரும் ஊர் புரணி
கட்டஞ்சாயாவின் கடுப்பு (கசப்பு)
சூரிய கிரணங்களின் இளஞ்சூட்டில்
வேக நடையுடன்
இயற்கையின் எழிலை
அவசர அவசரமாய் கண்ணுக்குள் நிரப்பும் வேகம்
என் காலை வேளைகளை அர்த்தமுள்ளதாக்கும் அழகிய தருணங்கள்