சுவடுகள்

என் பாதம் நனைக்க எத்தனிக்கிறாய்
நனையாமல் ஒதுங்க முயல்கிறேன்
உன் நுரை தீண்டிய மணலில்
மென்மையாய் தொட்டு பின் கொஞ்சமாய் உள் வாங்கிய
என் பாதம் விட்டச் செல்லும் பாதச்சுவடுகளை
பலம்கொண்ட மட்டும் தடம் தெரியாமல் அழித்துச் செல்கிறாய்
ஒட்டாத என் மீது கொண்ட கோபமா?
என்னால் அழிக்க முடியுமென்ற கர்வமா?
இது என் இயல்பென்று எடுத்துரைக்கும் முயற்சியா?
எதை நிலைநாட்ட விரும்புகிறாய்?
ஒரு நொடி ஆழமாய் பதிந்து
மறு நொடி மாயமாய் மறையும் சுவடின்
விந்தைக் கண்டு ஏக்கம் கொள்கிறேன்
மறைய வாய்ப்பிருந்தால்....

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (2-Mar-16, 2:04 pm)
Tanglish : suvadukal
பார்வை : 85

மேலே