விழித்தெழு! தோழா!!

உனக்குள்ளே உன்னை தேடு!
மனதுக்குள் விண்ணை தொடு!!

கனவுக்குள் நினைவை நிலைநாட்டு
நிலவுக்கும் நீ சென்று அமுதூட்டு!!

ஏதுமில்லையென்ற ஏக்கம் களை
மீதமுள்ள அறிவினை செயலாய் விதை!

இருப்பதை கொண்டு இன்புற கற்று
சேர்ப்பதை கொண்டு பிறருக்கும் கொடு!

எழுதியவர் : கனகரத்தினம் (19-Mar-16, 10:55 am)
சேர்த்தது : புதிய பாரதி
பார்வை : 190

மேலே