மலர்கள்
 
            	    
                தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள் 
பார்ப்பார் இல்லையே பறிப்பார் இல்லையே 
என்று வருத்தப் படுவதில்லை.
நாளை பூப்பதற்கு தயங்குவதில்லை 
மறப்பதில்லை 
பறிப்பதில்லை 
பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் 
மனிதன் ரசனை அற்றவன் !
மலர்கள் 
இயல்பாய்ப் பூத்து என்றும் 
இயற்கையோடு சிரிக்கும் !
-----கவின் சாரலன்
	    
                
