தாய்க்கு

குழந்தையின் பசி அழுகை
மணிப்பொறியாய் ஒலிக்கிறது ..
மகனின் அடம் அழுகை
லய வாத்தியமாய் ஒலிக்கிறது.
மகள் பேசும் மழலை
செய்யுளாய் மனதை கவர்கிறது
மகள் படிக்கும் பாடம்
வேதமாய் காதுகளில் விழுகிறது.
மகனின் நடை சத்தம்
தாளமாய் தொனிக்கிறது
உறங்கையில் குறட்டையும்
சந்தமாய் கேட்கிறது
அவர் கோபித்து திட்டுவதும்
ஸ்தோத்திரமாய் கேட்கிறது.

எழுதியவர் : சுபா சுந்தர் (21-Mar-16, 5:27 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : thaaiku
பார்வை : 422

மேலே