பசியுடன்மியாவ் மியாவ்

வயோதிகப் பூனையொன்று
வாசலில் வந்து நின்றது
பசியுடன்...மியாவ்... மியாவ்...

மெலிதான குரல்,
மெலிந்த உருவம்,
எலும்பை எண்ணி விடலாம்;

பரிதாபமாக இருந்தது,
பாலும் ரொட்டியும்
பக்கத்தில் வைத்தேன்;

மெல்ல அருகில் வந்தது,
நன்றியுடன் சாப்பிட்டது,
சொல்லாமல் சொல்லியது;

மியாவ்..மியாவ்...மியாவ்....
நன்றி.. நன்றி... நன்றி....!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-16, 1:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 878

மேலே