பூக்களில் எல்லாம் பறந்து செல்லும் பட்டாம் பூச்சி

பா :

பூக்களில் எல்லாம் பறந்து செல்லும்
பட்டாம் பூச்சி இவள் புன்னகை இதழருகில்
மயங்கி நின்றது தேனோ தேன்மலரோ என்று

அவள் மெல்லிய விரலால் பிடிக்க முயன்ற போது
இவள் தன் மலரல்ல என் மலரென்று
வண்ணச் சிறகு விரித்து விடை பெற்றது !


ப ஃ றொடை வெண்பா :

மலரெல்லாம் தாவிடும் ஒர்பட்டாம் பூச்சி
மலரோ மலர்த்தேனோ புன்னகை தேனிதழ்
என்று மயங்கியே நின்ற பொழுதில்
இவளதை தன்விரலால் மெல்லப் பிடிக்க
இவள்தன் மலரல்ல என்மலர் என்றது
வண்ணச் சிறகு விரித்து விடைசொல்லி
வானில் பறக்குது பார் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-16, 10:35 pm)
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே