கருவறை நாட்கள்

கருவறையில் கண்டேன் இருளை!
அந்த இருளிலும் நான் உணர்ந்தேன் வெளிச்சத்தை
தாயின் அன்பால்!
எனக்கு கேட்பது என் தாயின் குரல் மட்டுமே…
நானும் பதிலலிதேன் என் தாயின் குரலுக்கு.
எனது பாஷை அசைவு தான் என்பது
அவள் மட்டுமே அறிவாள்…
அறிமுகம் செய்தாள் என் தந்தையை…
அவரோ என் அசைவுக்காக காத்திருக்கிறார்!
நானோ பதிலலிக்கவில்லை…
ஆனாலும் கோபம் கொள்ளவில்லை காத்திருந்தார்,
நான் அசைந்ததும்! ஆனந்த கொண்டாட்டமே…
கண்ணுறங்கினாள் என் தாய், கனவுக்குள் நுழைந்தேன்.
அந்த கனவில் நான் மட்டுமே…
கருவறையில் கண்டேன் எதிர்காலத்தை!
இந்த தாயை காண 300 நாட்கள் காத்திருக்க வேண்டுமா?
நாட்கள் 280 ஆனது என்னால் காத்திருக்க முடியவில்லை…
வெளிவர முயன்றேன், வலியால் துடித்தாள் என் தாய்…
அப்பொழுதே என் தாயின் வலியை உணர்ந்தேன்…
அதனால் தான் பிறக்கும் போதே
அழுது கொண்டே பிறந்தேன்…

எழுதியவர் : ஜிலானி (6-Apr-16, 6:32 pm)
சேர்த்தது : Sayed Mohamed Jelani
Tanglish : karuvarai nadkal
பார்வை : 126

மேலே