என் ஏக்கம் தீரவே
விடவா தொடவா
விடுமுறை தரவா - நீ
கனவின் வரவா
உயிரின் உறவா
கவிதை வடிவாய்
காற்றின் உருவாய்
உயிரினுள் கலந்து
உறக்கம் பறித்தாய்
உன்னை தேடி - தொலைத்த
நிமிடங்கள் கோடி
ஒருமுறை சொல்லடி
என் ஏக்கம் தீரவே
நான் கொஞ்சம் தூங்கவே .....

