அறுசுவை வாழ்த்து
இளவேனிற் காலத் தென்றலில் தவழ்ந்து
=இதயங்கள் தேடிடும் இன்பமாய் கமழ்ந்து
வளமான தாக வருகிற துர்முகி
=வருசம்எம் வாழ்வில் வசந்தமும் தந்து
புளகாங்கித கொள்ள பொழிகிற கொடையில்
=புவனத்து வயல்வெளி பச்சையும் தரித்து
அளவற்ற விளைச்சல் அறுவடை யாகி
==அனைவர்க்கும் கிட்ட அறுசுவை வாழ்த்து.!
**தோழமைகள் அனைவருக்கும் இதயம் கனிந்த சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்.
*மெய்யன் நடராஜ்