பூலோக நரகங்கள்

நடுத்தர மக்களும் ஏழைகளும்

பயணிக்கும் போதேல்லாம்

அவசரத் தேவைக்கு

வேறு வழியின்றி

மூக்கைப் பிடித்துக் கொண்டு

உள்ளே நுழைந்து

குமட்டும் நிலையில்

வெளியே வரும்

பேருந்து நிலையக் கழிப்பிடங்கள்,

அரசியல் தலைவர் எவரின் பெயரும்

சூட்டப்படமாலும், பெயர்ப் பலகையை

அலங்கரிக்கும் அவர் படமும் இன்றி

புறக்கணிக்கப்பட்டு

ஏக்கத்துடன் துர்நாற்றை வீசி

பெயர் சூட்டு விழாவுக்கு காத்துக்கிடக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேர்தல் முடிந்த பின்புதான்

விடிவு காலமோ என்னவோ?. .

எழுதியவர் : மலர் (14-Apr-16, 10:45 pm)
பார்வை : 62

மேலே