தாய் பாடும் தாலாட்டு - - - - - சக்கரைவாசன்

தாய் பாடும் தாலாட்டு
**************************************************
நோய்வாய்ப்பட்டு ஓய்ந்துடலம் நொந்துவிழும் குழவியினைப்
போய்வாரித் தொட்டிலிட்டுப் பூங்கரத்தால் ஆட்டிவிடும்
தாய்பாடும் தாலாட்டால் தான்மயங்கிப் பரவசமாய்ச்
சேய்ஆழ்ந்து துயில்புரியும் ஆனந்த மயக்கத்தில் !

(ஆராரோ பாடினாலும் தாலாட்டு ஆகாதம்மா . யாராரோ பாடினாலும்
தாய்போல ஆகாதம்மா என்ற திரை இசைப் பாடலைக் கேட்கும்போது
எனக்குள் தோன்றிய சிந்தனையே இப்புனைவு )

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Apr-16, 10:20 pm)
பார்வை : 69

மேலே