தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 31 - = 81
"மூன்றெழுத்து ஓசை; அதை சிறைப்பிடிக்க ஆசை
சிறைப்பிடித்து அந்திமத்தில் பூஜை செய்ய ஆசை."
"பாதை மிக எளிது - அதில் பயணம் மிக எளிது
பழக பழக பகிர்ந்தளிக்கும் பருவகால விருந்து "
பூக்களின் நறுமணம் காற்றினில் உலா வரும்
பூவினுள் தேனுண்டு கருவண்டு குஷி பெறும்
வானிலை காற்று வேகமாய் வீசிடும் நேரம்
வான்மேக கூட்டம் துயில் கலைந்து ஓடும்
தேன்மொழி பேசும் கிளி வளர்த்தேன் - அதை
என் கனிமொழி உனக்கு பரிசளித்தேன்
உன்மொழி பொன்மொழி; ஊருக்கு நன்மொழி
உயிரே உன் மூச்செல்லம் வாழுது தமிழ்மொழி
திரைப்போட்ட மேகம் விலகியதால்
பிடிப்பட்ட நிலவு வெளியேறுது
இடைப்பட்ட தூரம் தெரியாததால்
நடு பக்கமாய் அது நகருது
காலை கதிரவன் தோன்றும் முன்னே
மாலை சந்திரன் மறைவதேனோ..
கதிரவன் கண்ணொளி படுவதாலே
கறுத்துப் போவோம் என பயம்தானோ
புன்னகை சிந்தும் பால் நிலவே
பல்லவி முடிந்தது போவோமா
நெஞ்சத்தில் எழும் ஆசைகளை
மஞ்சத்தில் ஏற்றி மகிழ்வோம் வா

