10 செகண்ட் கதைகள் - கறுப்புப்பணம்

"தகுதியும் திறமையும் இருந்து பெரும் புகழும் கிடைச்சுருச்சுனா ஒருத்தன் சம்பாதிக்கும் பணத்துக்கு கணக்கே இல்லை, அவன்கிட்டே தான் கறுப்பு பணம் நிறைய இருக்கும்; சந்தோஷம் இருக்கும், ஆனா நிம்மதி இருக்காது, நிழலைக்கூட நம்பவும் முடியாம நிம்மதியாவும் இருக்க முடியாம தினம் தினம் செத்து செத்து பொழைக்கிறது,
ஏன்னா புழைப்புடா சாமி?"

என்றான் கணவன்.
மெல்ல முறைத்து விட்டு மனைவி சொன்னாள்:

"அதுக்காக கைக்கும் வாய்க்கும் பத்தும் பத்தாம உசிரைப்புடிச்சுக்கிட்டு உங்க கூட வாழ முடியாது, நான் எங்கப்பா வீட்டுக்கே போறேன்."

"அப்படியா, அப்பா இரு, நானும் வர்றேன்..!"

"எதுக்கு?"

"நீ தானே சொன்னே, நான் தானே உன் உசிரு?"

"............."

எழுதியவர் : செல்வமணி (19-Apr-16, 10:56 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 200

மேலே