ஆம்புலன்ஸ் எல்லாம் எதுக்குடா வச்சிருக்காங்க

ஏண்டா ஒவ்வொரு மருத்துவ மனையிலும் ஆம்புலன்ஸ் வச்சிருக்காங்களே. அதெல்லாம் எதுக்குடா?

அட இது கூடவா உனக்க்த் தெரியாது. உயிருக்குப் போராடிருக்கற நோயாளிங்க பாதையிலெ தடையில்லாம சீக்கிரமா அழச்சிட்டு வந்து அவுங்க உயிரக் காப்பாத்தத் தான் ஆம்புலன்ஸ் மருத்துவமனைகளிலெ வச்சிருக்காங்க.

இன்னிக்கு செய்திகங்களே ஆம்புலன்ஸ்சைப் பத்தி வேற மாதிரி செய்தியும் சொன்னாங்க.

ஓ... அதச் சொல்லறயா. அது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்தி. அத வெளில சொன்னா வெக்கக்கேடு. இருந்தாலும் சொல்லறேன். கோடிக்கணக்கான பணத்தைக் கடத்தறதுக்கு யாரோ ஒருத்தரு ஆம்புலன்ஸ்சைப் பயன்படுத்தினாருன்னு குற்றச்சாட்டு. எலலாம் அந்த அங்காள பரமேஸ்வரி பாத்துக்குவா.
நமக்கென்ன வந்திச்சு. நமக்கு சம்பந்தமில்லாத விசயத்தையெல்லாம் அதிகம் பேசக் கூடாது.

எழுதியவர் : மலர் (24-Apr-16, 4:31 pm)
பார்வை : 135

மேலே