அரை வேக்காடு சுதந்திரம்

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்...

🔭அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும்
இணைத்துவிட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன்,
நாம் தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

🚅நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

🚇ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

🏤நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கில் கட்டிடங்களும் பாலங்களும்
அணைகளும் அப்படியே இருக்க முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

🚢நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான் வெள்ளைக்காரன்!

📖பணம் பிடுங்கும் பச்சோந்தி கல்வி நிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்!

நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

🍞வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறது, அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

🎏மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க தவறிவிட்டோம் !

💴120 கோடி மக்கள் தொகையில் 70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம், 70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!

இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

🇮🇷எப்படி குத்திக்கொள்ளமுடியும் கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும்
இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

🗿நம்நாட்டு பெண்களை கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை

🗽சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள! ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும் என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (26-Apr-16, 12:16 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 104

மேலே