செவியறிவுறூஉ
அறவழியைக் காட்டி, நன்மையைச் செய்ய அறிவுறுத்துதல் "செவியறிவுறூஉ " எனப்படும்.
ஆசிரியப்பா
வாயுரை யூட்ட வளமாக நாம்வாழத்
தாயுளத் தாவும் தரும்நனிப் பால்போல்
உளம்கொளும் மாணவரே ! ஊருக்கு ளுங்கள்
அளப்பறிய வீரம் அதுகாட்ட வாகனத்தில்
வேகமாய்ச் செல்லல் விடுமின்
தேகம் காக்கத் தேவைமித வேகமே!
-விவேக்பாரதி