என்னுள் விருட்சம்

தாய் மரம் விட்டு
விதையோடு பறக்கும் பூ
இனப்பெருக்கத்திற்கு இடம் தேடும் போது
வானத்தில் வண்ணத்துப்பூச்சி
முகர்ந்து பார்த்து சென்றது..
இவள் வெறுமை என்று
விலகிச்சென்றது ..

ஆகாயத்திடம் இருந்து …
காற்றிடம் இருந்து …
அதனை பிரித்த பூமித்தாய்
மரம் வளர தன்மடி கொடுத்தது..
ஆயிரமாயிரம் வண்ணத்துபூச்சிகளின்
உணவுக்காக ...

எழுதியவர் : வா. க. கண்ணன் (29-Apr-16, 8:48 pm)
Tanglish : ennul virutcham
பார்வை : 111

மேலே