043016

என்னை உதறி விட்டு
அவள் செல்லும் போது
எனக்குள்ளே இருந்த எண்ணற்ற
காதலும் எங்கெங்கோ வழிதவறி
கல்லறையாய் நின்றது!

உணர்ச்சி அற்ற உருவமென்று
உதறி அவள் போன போது
உணர்வுக்குள் ஒதுங்கி இருந்த
உணர்ச்சியுள்ள கண்ணீரும்
கண் வழியே வருவதை
அறியமால் அவள் போகின்றாள்!

தீ பிடித்து எரியவிட்ட
மனம் சாம்பலாகி நின்றபோது
சாம்பலென்று நீ மிதித்தாய்!
அதை காதலென்று அறியாமல்!

வழிவழியே தேடிவரும் நான்
வழிதவறி நின்று விட்டேன்!
வந்தவழியும் மறந்து விட்டேன்!
அந்தவழி நீ வந்தால் என்னை
இழுத்துச்செல்வாய் என நினைத்தேன்!
வழிபோக்கன் என்றே விட்டுவிட்டாய்!

கானம் பாடிவரும் குயிலொன்று
நான் என்று நினைத்து
இதயவலி வெளிப்படுத்த சோகப்பாடல்
பாடி வந்தேன்.நீயோ
காகம் தான் கரையுதென்று
செவிமூடி சென்றுவிட்டாய்!
நான் அங்கே இறந்துவிட்டேன்!

எதிர்கால நேரத்தால்
ஏதேனும் நாள்களில்
நாம் இருவர்
சந்தித்தால் அங்கு
என் காதல்
புரியுமென்று மனமுருகி
விடைபெறுகிறேன் உன்னில்!

எழுதியவர் : (30-Apr-16, 1:29 pm)
பார்வை : 80

மேலே