4 உழவர்
உழுதுழுதே உழுத்துப் போனது உழவருடம்படா
உழைத்துழைத்தே கறுத்துப் போனதும் உழவருடம்படா
முள்ளிச் செடியில் முட்டிப் பானையில் கொஞ்ச கஞ்சியடா – அதில்
தேடிப் போட்ட இரண்டு சோறும் கரைஞ்சு போச்சுடா
கச்சைத் துணியில் தெரிந்த கிழிசல் சேறில் மறையுதடா – அவன்
உடலின் கீறல் மண்ணில் பட்டு குளிர்ந்து போகுதடா
வீட்டில் மனைவி ஓட்டை சட்டியில் நீர் அவிக்குதடா – அதைப்
பார்த்துப் பிள்ளை மகிழ்ச்சியிலே தூங்கிப் போகுதடா
மழையை நம்பி இருந்த பயிரும் வரண்டுபோகுதடா – அதை
பார்த்துப் பார்த்து உருகி உயிரும் பறந்து போகுதடா
பூவின் வாசம் நுகர்ந்த கூட்டம் சோறு உண்ணுதடா – இந்த
சேற்றின் வாசம் நுகர்ந்த கூட்டம் காற்றை உண்ணுதாடா
மேகம் பொய்த்து மழையும் பொய்த்து உழவும் பொய்க்குதாடா – அதை
நம்பி நம்பி ஏமாந்த மனதில் முள் தைக்குதடா
வங்கியிலே கடன்கள் மட்டும் மடங்கில் கூடுத்தடா – அவன்
வாழ்க்கை எனும் ஏணி மட்டும் வீழ்ந்து கிடக்குதடா
ஓட்டை ஓலைக் குடிசையில் தான் வாழ்க்கை நடக்குதடா – அதில்
பட்டினியில் பல உயிர்கள் பலியுமாகுதடா
விஞ்ஞானம் வளர்ந்திச்சாம் தொழில்நுட்பம் வளர்ந்திச்சாம் – அட
விவசாயம் கெட்டிடுச்சே
விதைத்த நெல்லெல்லாம் நிலத்துக்கு உரமாக
வேழாண்மை செத்திடுச்சே
நீதிகள் இழந்தார்கல் நிற்கதியானார்கள்
உலகம் அறியலயே – அதை
படமெடுத்தவன் பணக்காரனாயிற்றான்
பட்டினி தீரலயே