என்று வருவாய் பெண்ணே

அதிகாலை நேரம்
பச்சைப்புல் மேல்
பனித்துளி...

என் நெஞ்சிலும்
அவள் நினைவின்
பாசவலி....

ஆதவன் வந்தால்
பனித்துளி உருகிவிடும்..

அவள் வந்தாலே
மனசு வலி மறைந்து விடும்..

என்று வருவாய் பெண்ணே?
இலவு காத்த கிளியாய்
என்னை மாற்றி விடாதே....

எழுதியவர் : ஜெய் ரெட்டி (4-May-16, 6:38 pm)
Tanglish : enru varuvaay penne
பார்வை : 93

மேலே