வலியோடு வெற்றி

வலியோடு வெற்றி

உழைப்பாளியே , உழைப்பின் ஆழியே.!

சில செல்வ சீமான்களின் கர்வ குவியலுக்கு முன்,
உம் சிரம் கரம் உழைத்து பெற்ற அக்னி சாதனையை
கண்டு மலைத்து போனதுண்டு..!

பிறருக்கே ஆனாலும், மூச்சிறைக்க வியர்வை உரித்து
அச்செயலை முடிக்க நீ படும் பாடு,உணர்ந்தேன் உம்மை
அந்த பிரம்மன் படைக்க விதி சமைத்து உழைத்திருப்பானோ.!

இருள் இளைக்கும் வரைதான்
சலிக்காமல் ஒளிந்திருக்கும் சூரியஒளி.
இலக்கை தொடும் வரைதான்
சலிக்காமல் மேனிதழுவும் வியர்வைதுளி..!

உலகிற்கே உரித்தான,உன்னதமான மே தின
நாளில் தொழிலாளர் அனைவரையும்
இருகரங்களால் வணகுகிறேன்...


அன்புடன்

ஜெயப்பிரகாஷ் கண்ணன்

எழுதியவர் : ஜெயப்பிரகாஷ் கண்ணன் (6-May-16, 11:34 am)
Tanglish : valiyodu vettri
பார்வை : 76

மேலே