குறளடி வஞ்சிப்பா

மழைக்கூந்தலும் தரைதழுவிட
பிழைபேச்சிலே அகமகிழ்ந்திட
யவ்வனமிகு ஏந்திழையவள்
செவ்வண்ணமே சூடிநின்றனள்...!
மறுவுலகந் தனிலவளுடன்
குறுநகையுடன் நானிருப்பதாய்
காட்சியதுவும் எனைசாய்க்குதே
மீட்சிநினைவே பொல்லாததோ...!
காதலின்பமே கண்ணிரண்டிலும்
காதலெண்ணமே காளைநெஞ்சிலும்
இணக்கமுண்டடி இதயத்திலே
பிணக்கமேயடி ஊர்புறத்திலே...!
புனைந்திட்டதோர் காதலுக்கென
அணைத்திடுவரோ ஆவியினையே
புறஞ்சொலாமலே புலம்பிநாமுமே
இறக்குமட்டுமே வாழ்வோமடி..!
கனங்களோடிரு
கண்கள் தேயக் காத்திரு
தண்ணிலா தனிலே குளிர்வோம் நாமே..!

-குறளடி வஞ்சிப்பா

எழுதியவர் : வித்யா (10-May-16, 1:43 pm)
பார்வை : 152

மேலே