நாளும் பொழுதும் ஹைக்கூ -2-சுஜய் ரகு-
பருவம் தப்பி
வீசும் காற்றில் குளிர்
எங்கோ மழை
-------------------------------------------------
அமாவாசை இரவு
வெறிச்சோடிய வானம்
மழையில்லை
-------------------------------------------------
கோடை கருக்கலில்
வெறுங் கிளையில் அமர்ந்திருக்கிறது
சாம்பல் நாரை
-------------------------------------------------
இரவில் நீராவியைப்போல்
அறையெங்கும் பரவுகிறது
மின்விசிறிக் காற்று
-------------------------------------------------
யாமத்தில் ஒரு பறவை
கிளை தாவுகிற சப்தம் கேட்கிறது
பின் ஒரே சலசலப்பு
-------------------------------------------------
தீர்ந்ததாக ஆசுவாசப்பட
வெயில் மீந்திருந்தது
இரவுக் காற்றில்
-------------------------------------------------
வெயிலொத்த பரிபூரணத்தை
எவரிடமும் பெறவில்லை
பைத்தியங்கள்
-------------------------------------------------
கரும்புச்சாறு பிழியும்
எந்திரத்தில் திருவிழாக் களை
தேனீ கூட்டம்