ஒரு நிமிடக்கதை - குழந்தையை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம்
ஒரு கட்டுரை எழுத சொன்னார்.
.
தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்
என விரும்புகிறீர்கள்?"
ஆசிரியைஅக்கட்டுரைகளை திருத்தும் பொழுது
ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்,
.
அதை கண்ட அவர் கணவர் கேட்டார்,
"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்?
இந்த மாணவன் எழுதியுள்ள கட்டுரையைப்
படித்து பாருங்கள் என்று
அதனைக் கணவரிடம் கொடுத்தார் ஆசிரியை.
.
அதில், "கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும்
தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு.
நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.
அதைப் போல‌ வாழ வேண்டும்.
என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்
இருக்க வேண்டும்.
.
நான் பேசும் பொழுது
அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக
கேட்க வேண்டும்.
அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.
.
அப்பா வேலை முடித்து வந்ததும்
என்னுடன் விளையாட வேண்டும்...
அவர் களைப்பாக இருந்தாலும் கூட.
அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும்
என்னை விரும்ப வேண்டும். என்னை வில‌க்கக் கூடாது.
.
என் சகோதர சகோதரிகள் என்னுடன்
கொஞ்சிக் குழாவ வேண்டும்..
சண்டையிட வேண்டும். என் குடும்பத்தினர் அனைவரும்
என்னுடன் சில மணிகளாவது செலவிட வேண்டும்.
கடைசியாக ஒன்று,
.
நான் என் குடும்பத்தினர் அனைவரையும்
எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்.
என் இறைவா, நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை,
நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும்..
அவ்வளவு தான்.
.
" இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,
"பாவம் அந்தக் குழந்தை,
இந்தக் குழந்தையை கவனிக்காமல்
இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"
.
ஆசிரியை கூறினார், "இந்த கட்டுரையை எழுதிய
மாணவன் வேறு யாருமல்ல, நமது மகன் தான்"

எழுதியவர் : செல்வமணி (13-May-16, 9:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 199

மேலே