காவடிச்சிந்து 5
வானமகள் அளித்திடும் கொடை - அதை
வாங்குவதில் நமக்கென்னத் தடை - அந்த
வஞ்சியவள் வாஞ்சையுடன் விஞ்சிநின்று வீசுகின்ற
வேளை-நல்
மாலை
தானமது மழையெனத் தரும் - மண்ணின்
தாகமதைத் தீர்த்திடவே வரும் - அந்தத்
தாயவளின் நேசமதை தூயவளின் பண்பை நீயும்
தேடு - நலம்
பாடு
கவிதையாக்கம் ; திருமதி.மஞ்சுளாரமேஷ்