49 O

பசி ராகம்
புல்லாங்குழல்
விறகு

~~~~~~~~~~~~~~~~~

யூ டு ப்ருட்டஸ்
இருக்கின்ற நாட்டில் தான்
குப்பிகளும் வாழ்கின்றன

~~~~~~~~~~~~~~~~~~

ஒரு நாள் கூத்து
தேர்தல்
முதல்நாள் கதாநாயகன்
பின் ஜோக்கர் தான் நாளும்

~~~~~~~~~~~~~~~~~~

இருவர்வாழும்
உலகில்
144 தடை உத்தரவு
** ஊடல்

~~~~~~~~~~~~~~~~~~

உயிரை திருடிவிட்ட
உயர்திரு 420 க்கு
அதிகபட்ச தண்டனையாக
காதலியின்
மன சிறையில்
ஆயுள் தண்டனை விதிக்கிறேன்
** திருமணம்
(களத்திர காரகர் )

~~~~~~~~~~~~~~~~~~

மகாபாரதத்தில்
சீீதா
கவிதை சொன்னது
**மழலை

~~~~~~~~~~~~~~~~~~

சாலைகளில்
மரங்களுடன்
மனிதர்களும்
காட்சிபொருளாய்

** ?
நாகரீகம்
~~~~~~~~~~~~~~~~~~
இரயில் பயணம்
பல விசித்திர முகங்கள்
புரியாத முரண்கள்
புரிந்தது பயணம்
~~~~~~~~~~~~~~~~~~

வெங்காய வியாபாரிக்கு
புரிந்தது
வாழ்க்கை

~~~~~~~~~~~~~~~~~~

ஆடி மாசம்
கூழ்
கெடைக்காது
எல்லாருக்கும்
~~~~~~~~~~~~~~~~~~

வானத்ல மீனு
வலை வீச தான்
யாரும் இல்ல
~~~~~~~~~~~~~~~~~~

பேனா முனை
வேலை நிறுத்தம்
மை இன்றி

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-May-16, 10:28 pm)
பார்வை : 51

மேலே