ஒரு நிலைப்படுத்தும்

மனதை ஒரு நிலைப்படுத்தி
வாழும் நிலை உன்னதமானது

நிலைப்டுத்துவது சாமானியமல்ல
அது ஒரு வழிமுறை .

நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.

நொடித்துப் பார்ப்பவனை
மறந்தும் கருதாமல்.


வெடித்து விளம்புவனை
எவ்விதத்திலும் அறியாமல்

புறம் கூறுபவனை
ஒதுக்கி சகியாமல்


தன நோக்கிலே
குறியாகி வாழும் நோக்கு


மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (16-May-16, 4:32 pm)
பார்வை : 319

மேலே