வஞ்சித்துறை ஒத்தையடிப் பாதையிலே
ஒத்தையடிப் பாதையிலே
ஓர்நாள்நான் போகையிலே
பச்சைப் பசேலென
புற்கள் பார்த்தனவே
புற்களின் புன்னகையில்
ஆசை மொட்டுக்கள்
அரும்பியதால் மனதிற்குள்
பூக்களாய் விரிந்தனவே
ஒத்தையடிப் பாதையை
கடந்துநான் சென்றபின்னே
எதிர்பட்ட சாலையில்
எத்தனைபேரிருந்தனரோ
என்முன் இருப்பவரே
எனைஎதிர்த்து நிற்பாரோ
என்பின் நடப்பவரும்
எனைஎதிர்த்து நிற்பாரோ
பலர்முகங்கள் பார்த்ததுபோல்
தெரியாத பொழுதினிலே
எப்படி நான்அறிவேன்
எடுத்தெனக்கு சொல்வார்யார்