கிழிந்த தாள்

ஒரு பாடல் வானொலியில்
ஒலிக்கும்போதெல்லாம்
என்னை நினைத்துக் கொள்வதாய்
சொல்வாய் ..நீ!

அந்த குறிப்பிட்ட பாடலை
ஒருமுறை இப்போது
பாடிப் பார்க்கிறேன்..
உன்னைப் பற்றிய
நினைவு மத்தாப்பூக்கள்
என்னை சுற்றிலும்
பூத்து ஒளிர்வது போல்
ஒரு மாயையை
ஏற்படுத்தி செல்லுகின்ற
அந்தப் பாடலில்
நழுவி ஓடுகின்றன வார்த்தைகள்
“என்னை மறந்ததேன் தென்றலே”
என்று ..!

ஆம்..
நாம் கடைசியாக
சந்தித்தபோதுகூட
அந்த பாடல்தான்
..
..
என்று அதோடு முடிந்திருந்த
பாதி கிழிந்த தாளில்
யாரோ எழுதியிருந்த
கவிதையை
படிக்கிறேன்..
ஏனோ..
பிடிக்கவில்லை எனக்கு
அந்த கவிதை !

எழுதியவர் : கருணா (29-May-16, 11:33 am)
Tanglish : KILINTHA THAAL
பார்வை : 105

மேலே